Sunday 28 April 2024

ரசிகனின் தூய கலையனுபவத்திலேயே கலை முழுமையை எய்துகிறது - கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணி நேர்காணல்

கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணி

கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணி ‘மிழாவு’ இசைக்கலைஞர். புராண இதிகாசங்களுடன் சமகால சமூக விமர்சனமும் கலந்த ‘சாக்கியார் கூத்து’ என்ற கதைசொல்லல் வடிவத்தை நிகழ்த்தக்கூடிய கலைஞர். ஈஸ்வரன் உண்ணி 1959ல் ஆண்டு பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் பிறந்தார். தாய் மண்ணம்பட்ட பார்த்தல வாரியத்து சின்னம்மு வார்யஸ்யார். தந்தை பச்சையில் வாரியத் கிருஷ்ணன் வாரியார். 13 வயது வரை பள்ளிக்கல்வி கற்றார். அந்த கல்வியை நிறுத்திவிட்டு ஷொர்ணூரில் உள்ள கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார். மிழாவுக்கான ஐந்து வருட கல்வி கற்ற பின்னர், மத்திய அரசின் உதவித்தொகையில் மேலும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கலாமண்டலத்தில் பயின்றார். மொத்தம் கலாமண்டலத்தில் இருந்த 8 ஆண்டுகளில் கூடியாட்டத்திற்கான மிழா இசைபோக சாக்கியார் கூத்து, பாடகம் போன்ற கதைசொல்லல் சார்ந்த கலைவடிவங்களையும் கற்றுக்கொண்டார். மனைவி ஷோபா, இரண்டு மகள்கள். தற்போது ஷொர்ணூரில் வசிக்கிறார். 

கூடியாட்டம்: ஓர் அறிமுகம் - சுதா கோபாலகிருஷ்ணன்

“கூடியாட்டம்”  என்ற கேரளத்தின் செவ்வியல் நிகழ்த்துகலை சமஸ்கிருத நாடகங்களை அரங்கில் நிகழ்த்தகூடியது. கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றியது. உலகில் உள்ள அரங்கு சார்ந்த  நிகழ்த்துகலைகளில் மிகமிகப் பழைமையானது என்ற அந்தஸ்தை பெற தகுதியான கூடியாட்டம் சமீபகாலத்தில்  உலகெங்குமுள்ள அரங்குகலை ரசிகர்களின், அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. 2001 ஆம் ஆண்டில் கூடியாட்டம் 'மானுடத்தின் மொழி வழி, பண்பாடு சார்ந்த மரபுசின்னங்களின் தலைசிறந்த படைப்பு'களுள் ஒன்றாக UNESCO அமைப்பால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவின் பிற பகுதிகளில் சமஸ்கிருத நாடகங்களை அரங்கில் நிகழ்த்தும் வழக்கம் நின்றுவிட்ட போதிலும் தென்கோடி மாநிலமான கேரளத்தில் மட்டும் இந்நாடக மரபு அறுபடாமல் நீடிப்பது வரலாற்றுப்பூர்வமாக ஆர்வமூட்டும் விஷயம். அஶ்வகோஷர், பாஸன், சூத்ரகர், காளிதாசன், ஸ்ரீஹர்ஷன், போதாயனர், மகேந்திரவிக்கிரமவர்மன் இன்னும் இதுபோன்று பல நாடக ஆசிரியர்களால் எழுதப்பட்ட சமஸ்கிருத நாடகங்களின் வளமான தொகை நமக்கு கிடைக்கிறது. ஆனால் இவை எழுதப்பட்ட காலத்திலேயே மேடையில் அரங்கேற்றப்பட்டதா என்பது குறித்து நமக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. ஒருசில சமஸ்கிருத நாடங்களிலும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரத்திலும் அரங்கேற்றம் தொடர்பான குறிப்புகள் உள்ளன. கூடியாட்டத்தின் நிகழ்த்து வடிவம் பெரும்பாலும் நாட்டிய சாஸ்திரத்தில் உள்ள அழகியல் விதிகளை கடைப்பிடித்தாலும் அதற்கென தனித்துவமான அரங்க ஒழுங்குகளும் நடிப்பு முறைகளும் உண்டு. பண்டைய காலங்களில் கேரளத்தில் கோவில் சார்ந்த சாதிப்பிரிவினரான அம்பலவாசிகளில் சாக்கியார், நம்பியார் என்ற சாதிகள் தவிர பிற எவருக்கும் கூடியாட்டத்தில் ஈடுபட வாய்ப்பிருக்கவில்லை. 1950ற்கு முன் கூடியாட்டம்  கோவிலில் மட்டும் நிகழ்வதாக,  ஒருவகையான புனிதமான சடங்குசார்ந்த கலைவடிவமாக இருந்திருக்கிறது.  நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் விரிவான அபிநய முறைமையால், சிக்கலான அரங்க இலக்கணங்களால் கூடியாட்டம் மிகக்குறுகிய வட்டத்துக்குள், அவ்வளவாக மக்கள் செல்வாக்கு இல்லாத கலைவடிவமாகவே இருந்து வந்திருக்கிறது.    அதன் கைமுத்திரைகளும் நடைமுறைகளும் பரிச்சயமான வெகுசிலருக்கு மட்டுமே புரிந்துகொண்டு பின்தொடர வாய்ப்பளித்தது. கூடியாட்டத்தின் அரங்க நடைமுறைகளுக்கும் நாட்டிய சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதற்கும் வெளிப்படையான வேறுபாடுகள் உண்டு, இந்த முரண்பாட்டுக்கான காரணமாக அறிஞர்கள் அளிக்கும் அதிகபட்ச விளக்கம் இது நிலப்பகுதி சார்ந்த மாறுதலாக இருக்கலாம் என்பதே. எனில் இந்த அரங்க கலைவடிவின் தனித்தன்மைகள் என்னென்ன?

பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

 பகுதி ஒன்று - புத்தரின் வாழ்க்கை

புத்தர், பிட்சை கேட்பவராக - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர்

1. நீங்கள் எந்த மதத்தை(religion)* சேர்ந்தவர்?

பௌத்தம்

2. பௌத்தம் என்றால் என்ன? 

புத்தர் என்ற மாபெரும் ஆளுமையால் வழங்கப்பட்ட போதனைகளை உள்ளடக்கியது.

3. இந்த போதனைகளுக்கு ‘பௌத்தம்’ (Buddhism) என்பது தான் சிறந்த பெயரா?

இல்லை, அது (Buddhism) மேற்கத்திய சொல்வழக்கு, ‘புத்த தர்மம்’ என்பதுதான் அதற்கு சரியான பெயர்.

4. பௌத்தத்தை பின்பற்றும் பெற்றோருக்கு ஒருவர் பிறந்ததால் அவரை பௌத்தர் என்று நீங்கள் அழைப்பீர்களா?

நிச்சயமாக இல்லை. புத்தரை மிக உன்னதமான ஆசிரியர் என்றும், அவர் போதித்த போதனைகளின் மீதும், அர்ஹத்தர்களின் சகோதரத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையிலும் அவருடைய போதனைகளை பின்பற்றுபவரே பௌத்தர்.

சங்கத் தமிழில் வேதநெறி - மு. சண்முகம் பிள்ளை


மறை, வேதம், வாய்மொழி, எழுதாக் கற்பு, கேள்வி, முதுமொழி, முதுநூல் என்றெல்லாம் ‘வேதம்’ சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. நான்கு கூறுபாடாக அமைந்தது. ஆறு அங்கத்தாலும் உணரப்பட்டது. பழமையான ஒரு நூல் அருமறை, நான்மறை, நால் வேதம் , அருமை நான்கு என்னும் அடை மொழிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்தணரால் ஓதப்படுவது என்னும் கருத்தில் அந்தணர் வேதம், அந்தணர் அருமறை, அந்தணாளர் நான்மறை, என்றும் குறிக்கப் படுகிறது. நீண்ட சடையையுடைய முதுமுதல்வனது வாக்கை விட்டு நீங்காது உறைவது வேதம் இது எழுதாமல் செவிவழிக் கேட்டுக் கற்கப்படும் நூல். வேதம் இசையோடு பாடப்பெறுவது என்பது,

தாதுஉண் பறவை போது முரன்றாங்கு
ஓதல் அந்தணர் வேதம் பாட (மதுரைக்காஞ்சி 655-656)

என்பதனால் விளங்கும். 'சிறந்த வேதம் விளங்கப் பாடி” (மதுரைக்காஞ்சி.468) என்னும் மதுரைக்காஞ்சித் தொடருக்கு, ''அதர்வ வேதம் ஒழிந்த முதன்மைப்பட்ட வேதங்களைத் தமக்குப் பொருள் தெரியும் படி ஓதி' என்று பழைய உரைகாரர் பொருள் எழுதியுள்ளார். இங்கே 'சிறந்த' என்பது வேதங்கள் நான்கையும் குறிக்கும் பொது அடை மொழியாகவும் கொள்ளத்தக்கது. ஆயினும், வேதங்களுள் சாமவேதம் சிறப்பாகக் கூறப்படுவதனாலும் வேதங்களுள் கானம் செய்யப்படுவதற்கு ஏற்ப அமைந்தது இதுவே ஆதலானும், 'சிறந்த வேதம் என்னும் அடைமொழியும் ’'பாடி” என்னும் தொழிலும் குறிக்கப்பெறுவதனாலும் இது சாமவேதத்தைக் குறிப்பதாகக் கருதலாம் என்று தோன்றுகிறது.

தனி-அறிவியல் துறைகளிலுள்ள தத்துவ சிக்கல்கள் - 2: உயிரியல் - சமீர் ஒகாஸா

உயிரியல் சிற்றினங்கள் (Species) என்றால் என்ன?

அறிவியலாளர்கள் தாங்கள் ஆராயும் பொருள்களை வகைப்படுத்த பொதுவாக விரும்புவார்கள். நிலவியலாளர்கள் பாறைகள் எவ்வாறு உருவாயின என்பதைப் பொருத்து அவற்றை அனற்பாறை (igneous), படிவுப்பாறை (sedimentary), அல்லது உருமாற்றப்பாறை (metamorphic) என வகைப்படுத்துகின்றனர். பொருளியலாளர்கள் வரிவிதிப்பை அதன் கடினத்தன்மையைப் பொருத்து சரிவிகித வரி (proportional), வளர்விகித வரி (progressive) அல்லது தேய்வுவீத வரி (regressive) என வகைப்படுத்துகின்றனர். வகைப்படுத்தலின் முக்கிய செயல்பாடு தகவலை தெரிவிப்பது. வேதியியலாளர் ஒரு பொருளை உலோகம் என்று சொன்னாலே அது அப்பொருளின் பெரும்பாலான பண்புகளை நமக்கு தெரியப்படுத்திவிடும். அடிப்படையிலேயே பொருள்கள் பல வழிகளில் வகைப்படுத்தக் கூடிய தன்மை கொண்டவை. இதை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தலில் சில சுவாரஸ்யமான தத்துவ சிக்கல்கள் எழும்புகின்றன. உதாரணமாக, வகைப்படுத்தல் முறைகளில் ஒன்றை எப்படி தெரிவு செய்ய வேண்டும்? வகைப்படுத்த ஒரு ‘சரியான’ வழிமுறை உள்ளதா? இல்லை அனைத்து வகைப்படுத்தல் வழிமுறைகளும் எதேச்சையானது தானா? போன்றவை. இக்கேள்விகள் உயிரியல் வகைப்பாடு (Classification) அல்லது வகையியல் (taxonomy) சூழலில் அதிக கவனம் பெறுகின்றன. இதையே இங்கு நாம் பார்க்கவிருக்கிறோம். 

கார்ல் லின்னியஸ் 1707-78

If ecology is to be preserved, it is imperative to discuss the significance of biodiversity conservation - Ravindran Natarajan Interview

 

Ravindran Natarajan is an Ornithologist and field activist whose passion for birds began 25 years ago, evolving into photography and research on avian species. In a bid to expand the reach of ornithology, he is embarking on a journey with a mission to train 1500 teachers and 10,000 students annually.  He maintains an active presence in disseminating his bird observations through publications in magazines and on social media platforms. Furthermore, his research findings are regularly featured in esteemed journals such as ResearchGate and Journal of Threatened Taxa. He has collaborated with numerous social and environmental activist groups to advocate for the designation of some of the state's most biodiverse areas as government-protected zones. This endeavor involves documenting rare species and conducting in-depth studies on the lifecycle of birds, among other initiatives. He has made significant studies that encompass not only birds but also butterflies and various wildlife species. He aids various government organizations such as the Forest Department, and he has also founded and manages the Irgukal Amrita Nature Trust and the Madurai Nature and Culture Centre.